யாழில் சாரதி மீது சரமாறியாக வாள்வெட்டு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் நிறுத்தி, சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் சரமாரியாக வெட்டினர். குறித்த சம்பவம் இன்று மாலை நடைபெற்றது. இச்சம்பவத்தினால் சாரதியின் கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 05 நாட்களுக்கு முன்னர் யாழ்.பஸ் நிலையத்தில் சில யுவதிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் 04 […]













