செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய செங்குத்து பெர்ரி பண்ணை

  • September 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ரிச்மண்டில் ஒரு புதுமையான புதிய விவசாயத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. Plenty Richmond Farm என்பது உலகின் முதல் உட்புற, செங்குத்தாக வளர்க்கப்படும் பெர்ரி வசதி ஆகும், அங்கு அவை அறுவடை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய நுட்பம், உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவால் ஆதரிக்கப்படுகிறது, இது சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்காமல் போதுமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதை சாத்தியமாக்குகிறது. பண்ணை அடிப்படையிலான அணுகுமுறை ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பதற்கு, பாரம்பரிய விவசாயத்துடன் ஒப்பிடும் போது, ​​வியத்தகு குறைந்த […]

இலங்கை செய்தி

கடந்த அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் குறித்து ஜனாதிபதியின் பணிப்புரை

  • September 26, 2024
  • 0 Comments

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால […]

இந்தியா செய்தி

மது அருந்துவதை தடுத்த தந்தையை கொலை செய்த மகன்

  • September 26, 2024
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இளைஞர் ஒருவர் குடிப்பதை தடுக்க முயன்ற தந்தையை கொலை செய்துள்ளார். அவர் தனது தந்தையின் தலையில் செங்கலால் தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதைக் கண்டு, தற்கொலை போல மாறுவேடமிட முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். “ஒரு வாக்குவாதத்திற்கு பிறகு, கோரக்பூரைச் சேர்ந்த கன்ஹையா திவாரி தனது தந்தையின் தலையில் தாக்கினார் பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்வது போல் மின்விசிறியில் தூக்குபோட முயன்றார்.பின்னர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்” என உத்தரபிரதேச காவல்துறையின் மூத்த அதிகாரி ஜிதேந்திர […]

இலங்கை செய்தி

விசா விண்ணப்ப முறை குறித்து புதிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கை

  • September 26, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய அரசாங்கம், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், முந்தைய விசா வழங்கும் முறையை உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறை படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, நள்ளிரவு முதல் அனைத்து வெளிநாட்டவர்களும் முந்தைய முறையின் கீழ் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். “விசா வசதியை VFS குளோபல் நிர்வகிக்கும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல்-லெபனான் மோதல் – 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அழைப்பு

  • September 26, 2024
  • 0 Comments

காசா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் களமிறங்கினர். இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்களை தாக்கியது. குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை […]

செய்தி விளையாட்டு

உலக சாதனை படைத்தார் கமிந்து மெண்டிஸ்

  • September 26, 2024
  • 0 Comments

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாளான இன்று (26) கமிந்து மெண்டிஸ் புதிய சாதனையை படைக்க முடிந்தது. எட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாசாதனையைகமிந்து படைத்துள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவின் நடவடிக்கையால் ஓய்வூதியத்தை இழந்த 85 எம்பிகள்

  • September 26, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க பாராளுமன்றத்தை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக கலைத்ததன் மூலம், முன்னாள் எம்.பி.க்கள் எண்பத்தைந்து பேர் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். அந்த எம்.பி.க்கள் அனைவரும் புதிய எம்.பி.க்கள் மற்றும் அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் முழு பதவிக் காலத்தையும் முடித்திருக்க வேண்டும். ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் எம்.பி.க்கு, எம்.பி.யின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக கிடைக்கும். இரண்டு பாராளுமன்ற பதவிகளை நிறைவு செய்யும் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாகும். ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் […]

செய்தி விளையாட்டு

அஸ்வின், முகமது ஷமி.. சிஎஸ்கே நிர்வாகம் போடும் மெகா திட்டம்

  • September 26, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி இருவரையும் வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்கவுள்ள மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. இதனிடையே மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளால் 5 வீரர்களை ரிடென்ஷன் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று, ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கப்படாது என்றும் தகவல் […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைகிறது?

  • September 26, 2024
  • 0 Comments

எரிபொருள் விலையைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதின் அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயமாக எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் உட்பட துறைசார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிக்கையை துரிதமாக வழங்குமாறு ஜனாதிபதி வேண்டியுள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதிர் வரும் தினங்களில் இவ்விடத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை செய்தி

உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் – ஜனாதிபதி அநுரவிற்கு பைடன் வாழ்த்து

  • September 26, 2024
  • 0 Comments

நான் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனது × தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார். சுதந்திர நேர்மையான அமைதியான தேர்தல் ஒன்றின் மூலம்  உங்களை தெரிவு  செய்துள்ளனர். நிச்சயம் எமது பூகோள வலயத்தின் பாதுகாப்பு அமைதியை சுபீட்சத்துக்காக ஒன்றித்து செயல்பட விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!