அச்சுறுத்தலையும் மீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வாளர்கள்…பிரதமர் ரிஷிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலையும் மீறி, கடந்த 4 மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 2 சிறு ரப்பர் படகுகளில் டசின் கணக்கானோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர் ஆண்கள் என்றே கூறப்படுகிறது. அவர்களை டோவரில் மீட்டு பிரிட்டிஷ் எல்லைப் படைக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. […]













