இலங்கை

இலங்கையில் கோர விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் பலி

ஹொரவ்பொதான – வவுனியா ஏ29 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹொரவ்பொதான– வவுனியா வீதியின் கிவுலகடவல பகுதியில் கார் ஒன்று இரண்டு மாடுகளை மோதி பின்னர் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காரில் பயணித்த 22 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 வயதுடைய இளைஞன் பலத்த காயமடைந்து ஹொரவ்பொதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த 22 வயதுடைய இளைஞன் அளுத்வத்தை மரதன்கடவல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இராணுவ சிப்பாய் ஆவார்.

உயிரிழந்த 19 வயதுடைய இளைஞன், ஹொரவ்பொதான, நிகவெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content