உலகம்

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 19 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்23 (மார்ச் 23) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

எம்23 கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருவதாக காங்கோ குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ருவாண்டா எல்லையில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். அம்மாகாணத்தின் எம்விசொ நகர் மீது பீரங்கி குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு கிவு மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content