தமிழக முதல்வரிடமிருந்து இலங்கையர்களுக்கு 1,591 வீடுகள்: ஸ்டாலின் புதிய திட்டம்
இந்தியாவில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டத்தை, தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மேல்மணவூர் கிராமத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் இது தொடர்பான விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது, தமிழகத்திற்கு இடம்பெயந்து சென்ற இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 19,498. இந்த மக்கள் மாநிலத்தின் 29 மாவட்டங்களில் 104 புனர்வாழ்வு முகாம்களில் வாழ்கின்றனர்.
இவர்களுக்காக 342 கோடி இந்திய ரூபாய் செலவில் பல கட்டங்களாக 7,469 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நவம்பர் 2021ல் தொடங்கப்பட்டது. அதன் மதிப்பு 176.02 கோடி ரூபாய். அங்கு 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன.