இலங்கை செய்தி

வரி பெகேஜை அகற்ற இரண்டு வழிகளே உள்ளன என்கிறது இலங்கை மத்திய வங்கி

வரி பெகேஜை அகற்ற இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அதிக மக்களை வரி செலுத்துபவர்களாக  மாற்றுவது. இரண்டாவது வழி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து சம்பளத்தை அதிகரிப்பது.

இவை இரண்டையும் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது என  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலுக்கு அப்பாற்பட்ட ஒரு தொழில்துறை மட்டத்திலான கலந்துரையாடலே இங்கு நடைபெறுகிறது.

ஐஎம்எப் ற்கு16 முறை சென்றாலும், சில நிபந்தனைகள் முறையாக செயல்படுத்தாததால்  வெற்றி பெறவில்லை.

பேச்சுவார்த்தை  மூலம் தான் வரி உயர்வு ஏற்பட்டது. ஒப்பந்தங்களை திரும்பப் பெறுவது ஒரு நாடாக நடைமுறை சாத்தியமில்லை.

வரி பெகேஜை அகற்ற இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அதிக மக்களை வரி செலுத்துபவர்களாக  மாற்றுவது. இரண்டாவது வழி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து சம்பளத்தை அதிகரிப்பது.

இவை இரண்டையும் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. தனியார் துறை சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அடுத்த முறை மக்களுக்கு  சலுகைகளை வழங்கலாம்.அதிக வருமானம் பெறுபவர்கள் தான்  இதை தாங்க முடியாது என்று விமர்சிக்கின்றனர்.

உற்பத்திப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு நாடு பெறும் பொருளாதார நன்மை ஆகும்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியில் வருமானம் அதிகரிக்கிறது. விவசாயத் துறையில் பெறுமதி கூட்டல் இருந்தால் நீங்கள் கூறியது போல் அதிக வருமானம் பெறலாம்.

ஆனால், இளம் தலைமுறையினர் விவசாயத்துக்குச் செல்ல வேண்டுமானால், அது இதைவிட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது வெளிநாடு செல்லும் இளைஞர், யுவதிகள் பணிபுரிவது விவசாயத்தில் அன்றி சேவைத் துறையிலாகும். விவசாயத்தின் பங்களிப்பு ஏழு சதவிகிதம். ஆனால் அந்தத் துறையில் பணிபுரிபவர்களின் அளவு இருபத்தி ஏழு சதவிகிதம் ஆகும்.

விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் சேவைத் துறையில் பணிபுரியும் ஒருவரின் வருமானத்தைப் பெற முடிய வேண்டும். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் ஆகிய இரண்டினதும் வளர்ச்சியின் மூலமே ஒரு நாடு கட்டியெழுப்பப்படுகின்றது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content