செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைனை அடுத்து வெடிக்கவுள்ள இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை

தைவான் மீதான சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் நிலையில் தற்போது அமெரிக்கா இல்லை என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் தீவை எந்த விலை கொடுத்தும் தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காத்திருக்கிறார். மட்டுமின்றி, ராணுவத்தை அனுப்பியேனும் தமது கனவை நிறைவேற்ற அவர் தயாராகி வரும் நிலையில், உக்ரைன் போருக்கு அடுத்து தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் தான், சீனாவுக்கு எதிராக ஒரு போருக்கான தயார் நிலையில் அமெரிக்கா இல்லை எனவும், சீனாவும் தற்போதைய சூழலில் ஒரு போருக்கான முடிவில் இல்லை எனவும் Michael OHanlon தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள போர்களின் மிகக் கொடூரமான பதிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா போர் இருக்கும் எனவும், இரண்டாம் உலக போரின் போது ஏற்பட்ட அதே நிலை ஏற்படும் எனவும் Michael OHanlon தெரிவித்துள்ளார்.மேலும், தைவானில் அமெரிக்கா சீனாவை எதிர்த்துப் போரிட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்க மக்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய, பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

உக்ரைனை

2027ல் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் நான்காவது முறையாக பொறுப்பேற்க இருக்கிறார். இதுவரை தமது ஆட்சி காலத்தில் சொல்லிக்கொள்ளும் எந்த சாதனையும் அவர் பெயரில் இல்லை.இதனால், சீன மக்களின் கவனத்தை திசை திருப்ப, தைவான் மீது அவர் போருக்கு தயாராகலாம் என தெரிவித்துள்ளார் தைவான் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ. மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை கடந்த ஆண்டு சீனா பதிவு செய்துள்ளது.

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் நான்காவது முறை பொறுப்பெடுத்ததும் அவர் தைவான் மீது போர் தொடுப்பார் என கூற முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் இப்படியான ஒரு நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே கடற்படை நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content