இலங்கை செய்தி

மனித உரிமைகள் குறித்து இலங்கை பிரதிநிதிகளுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்!

மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியா தொடர்பான மனித உரிமை அறிக்கைகளை கருத்திற்கொண்டு தனது 137வது அமர்வு தொடர்பான இறுதி அவதானிப்புகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் சில பரிந்துரைகளை வழங்கி இருந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த மூன்று அமர்வுகளிலும் சுமார் 183 முறைப்பாடுகள் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 93 முறைப்பாடுகள் தொடர்பில் குழு தனது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளது.

17 முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் குழு, பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content