ஐரோப்பா செய்தி

பிரான்சில் பறவைகளிடமிருந்து பாலூட்டிகளுக்கும் பரவும் பயங்கர தொற்று !

பிரான்சில் H5N1 என்னும் பயங்கர பறவைக்காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு பாரீஸ் பகுதியில், அந்த பறவைக்காய்ச்சல் சிவப்பு நரிகளுக்கு பரவியுள்ளதாக விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

Meaux என்ற இடத்தில் அமைந்துள்ள இயற்கை வனவிலங்குகள் காப்பகத்தில் கடல் புறா அல்லது gull என அழைக்கப்படும் சில பறவைகள் இறந்துகிடந்துள்ளன.அதே இடத்தில் மூன்று நரிகளும் இறந்து கிடக்கவே, அவற்றின் உடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அப்போது, ஒரு நரியின் உடலில் H5N1 என்னும் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சலுக்கு ஏராளம் பறவைகள் பலியாவது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைரஸ் பாலூட்டிகளுக்கும் பரவுவது தெரியவந்துள்ளதால் அது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content