செய்தி வட அமெரிக்கா

தண்ணீருக்காக கெஞ்சி உயிரிழந்த மாணவர்: குடும்பத்திற்கு 14 மில்லியன் டொலர்கள் இழப்பீடு

அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின்போது தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெரும் தொகையை பல்கலைக்கழகம் கொடுக்கவுள்ளது.

அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின் போது குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த 20 வயது மாணவரின் குடும்பத்திற்கு கென்டக்கி பல்கலைக்கழகத்திலிருந்து 14 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 465 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும்.

அமெரிக்காவின் டென்னசி மாநிலம் லூயிஸ்வில்லி பகுதியை சேர்ந்த கிராண்ட் பிரேஸ் என்ற 20 வயது கல்லூரி மாணவர், மல்யுத்த பயிற்சியின் போது எவ்வள்வு கெஞ்சியும் குடிக்க தண்ணீர் கொடுக்கப்படாததால் உயிரிழந்தார்.இந்த சோக சம்பவம் 2020 ஆகஸ்ட் 31ம் திகதி நடந்தது. கிராண்ட் பிரேஸ் தனது மல்யுத்த பயிற்சியின்போது, ஒரு அங்கமாக பனிஷ்மென்ட் ஹில் என்று அழைக்கப்படும் செங்குத்தான ஏற்றத்தில் நாள் முழுவதும் பலமுறை வேகமாக ஏறி இறங்கியதால் உடலில் நீர்வற்றியது. அப்போது அவருக்கு கடுமையாக தாகம் எடுத்துள்ளது.

தண்ணீர்

பிரேஸ் ADHD மற்றும் நார்கோலெப்சி நோயால் பாதிக்கப்பட்டவர், குறிப்பாக உடற்பயிற்சியின் போது சரியான நீரேற்றம் தேவைப்படும் மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நிலையில் அவர் இருந்தார்.ஆனால், அவரது பயிற்சியாளர்கள் அவரை தண்ணீர் குடிக்க அனுமதிக்கவில்லை. நீ மட்டும் என்ன ஸ்பெஷலா, உனக்கு மட்டும் தண்ணீர் குடுப்பதற்ககு? என்று கேட்டு கிண்டலும் செய்துள்ளனர். அவர் தண்ணீருக்காக கெஞ்சியும் மறுக்கப்பட்டதால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 45 நிமிடங்களுக்குப் பிறகு பிரேஸ் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இப்போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது.பிரேஸ் குடும்பத்தின் மிகப்பெரிய இழப்பை மதிக்கும் வகையில் இந்த வழக்கை இப்போது தீர்ப்பதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்று பல்கலைக்கழக அறிக்கை கூறியது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content