இந்தியா செய்தி

குழந்தைகள் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் சிரப்கள் தயாரிக்கும் மரியன் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய மருத்துவ பரிசோதனை முறைமைக்கு திருப்திகரமாக பதிலளிக்க முடியவில்லை எனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மருந்து உரிம அதிகாரி எஸ்.கே. சௌராசியா கூறியதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே உத்தரபிரதேச மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் உரிமத்தை ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமம் ஜனவரியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதை அடுத்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.

மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் சிரப்கள் தரமற்றவை எனக் கூறி, அவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.

இந்த மாத தொடக்கத்தில், நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டத்துடன் மற்றும் ஆய்வக சோதனைகள் நிறுவனம் கலப்படம் மற்றும் போலி மருந்துகளை உற்பத்தி செய்வதை உறுதிசெய்ததை அடுத்து, மேலும் இருவருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content