இலங்கை செய்தி

எலி மொய்த்த உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற  மனித பாவனைக்கு  பொருத்தமற்ற எலி  மொய்த்த  உணவுகள்  களஞ்சியப் படுத்தியும், விற்பனைக்காகவும் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த  உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியும் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் பேரில் குறித்த உணவகத்தில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  குறித்த உணவக உரிமையாளருக்கு  70, 000 ரூபாய்  தண்ட பணம் செலுத்துமாறும்  அதனை செலுத்த  தவறும் பட்சத்தில்  ஒவ்வொரு குற்றத்துக்காகவும்  3 மாதம் சிறை தண்டனையும்  29.03.2023 வரை  வியாபாரத்தை தடை செய்தும் நீதவான் நீதி மன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content