செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிசயம் – 138 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் 138 ஆண்டுகள் கழித்து ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதமையினால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் கரோலின் கிளார்க் (Carolyn Clark), ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clark) தம்பதியின் 2ஆவது பிள்ளை பெண் பிள்ளையாகப் பிறந்தது.

ஆண்ட்ரூ கிளார்க்கின் குடும்பத்தில் கடந்த 138 ஆண்டுகளாகப் பெண் பிள்ளைகளே பிறக்கவில்லை என்று People இணையவாசல் கூறியது.

அதை முதலில் கேட்டபோது ஆச்சரியமாக இருந்ததாகக் கரோலின் குறிப்பிட்டார்.

சென்ற செப்டம்பர் மாதம் பிள்ளையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளும் கொண்டாட்டத்தை அவர்கள் நடத்தினர்.

அப்போதுதான் பிறக்கப்போவது பெண் குழந்தை என அனைவரும் தெரிந்துகொண்டதாக People குறிப்பிட்டது.

பெண் குழந்தை ஆட்ரி (Audrey) சென்ற மாதம் 17ஆம் தேதி ஆரோக்கியமாகப் பிறந்தது.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content