இலங்கை செய்தி

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ்காரர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவின் மிரிஹான உப பிரிவின் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 74 கிராம் ‘ஐஸ் போதைப்பொருள் (Crystal methamphetamine), போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர் பிடகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 64 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பிடகோட்டே பிரதேசத்தில் டெய்சி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருளை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் ஒருங்கிணைப்புடன் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஊடாக போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். .

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content