யாழில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு இளைஞர்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.
நேற்று (31) மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)