இலங்கை செய்தி

பேராதனையில் உயிரிழ்ந்த கர்ப்பிணி தாய்

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 26 வயது கர்ப்பிணி தாய் உயிரை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (06) இடம்பெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பெண் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

கண்டி கன்னோருவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

பிரசவித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரசவத்திற்காக சிசேரியன் செய்யும் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்துகளின் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாகவோ இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிட முடியும் என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் மருந்து தட்டுப்பாடு முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content