இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் சர்வதேச தரங்களுக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தது.இதனை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் பயங்கரவாதத்திற்க்கு பரந்த வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளதுடன் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான அதிகாரத்தை, அதிகாரிகளுக்கு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இந்த சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும், சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைத்து கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எனவும் கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content