இலங்கை செய்தி

கடு அஞ்சுவின் குற்ற அறிக்கைகள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக தகவல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான ரத்மலானே குடு அஞ்சு என்றழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வாவின் குற்றச் செயல்கள் தொடர்பான குற்ற அறிக்கைகள் இன்று (3) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடு அஞ்சு நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல் அறிக்கைகள் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அறிக்கைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய குற்றத்துக்காக குடு அஞ்சு பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை அஞ்சு அஞ்சு செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்கிசைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை