இலங்கை செய்தி

நயினாதீவில் புத்தர் சிலை திருடிய இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாரையில் இருந்த புத்தர் சிலையை திருடிக்கொண்டு ,படகில் ஏறி குறிகாட்டுவான் பகுதிக்கு வந்த நிலையில் இளைஞன் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் விசாரணையில் இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் இளைஞனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை