விளையாட்டு

ஒலிம்பிக் தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை!

உலக தடகள சம்மேளனம் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.

2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்படி, தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

தங்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது இலங்கை பெறுமதியில் சுமார் 15,000,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் 2028 முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

128 ஆண்டுகால ஒலிம்பிக் பாரம்பரியத்தை உடைக்கும் உலக தடகள முடிவை செபாஸ்டியன் கோ ஆதரித்துள்ளார், இந்த கோடையில் பாரிஸில் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் பரிசுத் தொகையை வழங்கும் முதல் விளையாட்டு என்ற பெருமையை பெற்றுக்கொள்ளும்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content