செய்தி

பிரித்தானியாவில் மருத்துவமனை வாசலில் 28 மணி நேரம் காத்திருந்த அம்பியுலன்ஸ்

பிரித்தானியா – வேல்ஸில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே அம்பியுலன்ஸ் ஒன்று நோயாளியுடன் 28 மணி நேரம் காத்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது

சுவான்சீயில் இருக்கும் மொரிஸ்டன் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தாமதத்தால் அவ்வாறு நேர்ந்தது.

அதன் விளைவாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே 16 அவசர மருத்துவ உதவி வாகனங்கள் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் மற்ற பிரிவுகளில் தாமதம் ஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைப் பிரிவிலும் நோயாளிகளைக் கவனிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் மருத்துவமனை ஊழியர்களால் நோயாளிகளுக்குத் தகுந்த நேரத்தில் உதவியளிக்க இயலவில்லை.

உயிருக்கோ கை, கால்களுக்கோ ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே மக்கள் அவசர அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மொரிஸ்டன் மருத்துவமனையில் நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் ஊழியர்கள் கொண்டுவரப்பட்டனர்.

அவசர மருத்துவ உதவி வாகனத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் நோயாளிகள் வேறு வழிகளில் மருத்துவமனையைச் சென்றடையவேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content