வட அமெரிக்கா

அமெரிக்கா – மாயமான இந்திய மாணவர் … தீவிர தேடுதல் பணியில் சிகாகோ பொலிஸார்

அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்கிறது. இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கடந்த 2ம் திகதி முதல் காணவில்லை.

என் ஷெரிடன் சாலையின் 4300 பிளாக்கில் இருந்து அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஒரு வாரமாக தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கண்டுபிடித்தாலோ, அவரை பற்றிய துப்பு கிடைத்தாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு சிகாகோ காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய மாணவர் மாயமானது குறித்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது. மேலும், மாணவரை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், காவல்துறை மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி, தகவல்களை அறிந்து வருவதாகவும் தூதரகம் கூறியிருக்கிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content