Site icon Tamil News

இரண்டு உக்ரேனிய வீரர்களுக்கு ரஷ்யாவில் சிறைத்தண்டனை

மரியுபோல் நகரில் சண்டையிட்ட இரண்டு உக்ரேனிய வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை அது தொடர்ந்து ரஷ்யா விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிடிபட்ட உக்ரேனிய வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தியதற்காக மாஸ்கோவை உரிமைக் குழுக்களும் மேற்கத்திய நாடுகளும் விமர்சித்துள்ளன.

கடந்த மே மாதம் மரியுபோலின் கட்டுப்பாட்டை ரஷ்யா கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான உக்ரேனிய போராளிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

Exit mobile version