இலங்கை

வவுனியாவில் தொடரூந்துடன் மோதிய பாரவூர்தி – இருவர் காயம்!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

 

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!