இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

துருக்கியில் விமானம் நிற்பதற்கு முன் எழுந்து நின்றால் அபராதம் – அமுலாகும் புதிய விதிமுறை

துருக்கி செல்லும் விமானம் தரையிறங்கி இருக்கை வார் குறீயிடு அணைவதற்கு முன்பு பயணிகள், எழுந்து நின்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் துருக்கி சிவில் விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறை இம்மாதத் தொடக்கத்தில் நடப்புக்கு வந்துள்ளது.

விதிமுறையை மீறுவோருக்கு சுமார் 70 அபராதம் விதிக்கப்படும் என்று துருக்கியே ஊடகம் கூறியது.

ஆனால் ஆணையத்தின் வழிகாட்டியில் அபராதம் எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை.

விமானம் நிற்பதற்கு முன்பே பயணிகள் தங்கள் பைகளை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் அது குறித்து பலரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

துருக்கிக்கு ஆண்டுதோறும் பல மில்லியன் சுற்றுப்பயணிகள் செல்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி