இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையால் சிக்கல் – இன்று விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான தாமதங்கள், நாட்டின் தேசிய விமானப் பிராண்டிற்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களில் பல ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் சில விமான அட்டவணைகளில் தாமதங்கள் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்