செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பெரும் துயரம் – பொலிஸாரின் தவறால் நால்வர் மரணம்

கனடாவில் பொலிஸாரின் தவறால் நான்கு பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலை 401 விபத்தில் குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு நெடுஞ்சாலை 401 இன் தவறான பக்கத்தில் பல டர்ஹாம் பொலிஸ் வாகனங்கள் கொள்ளையடித்த சந்தேக நபரைத் துரத்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலையில் தவறான வழியில் வாகனம் பயணித்ததில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து Ontario வின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மதுபானக்கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரை பிடிக்கும் முயற்சில் பொலிஸார் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Clarington எனும் பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பி சென்றதுடன், வீதியில் முரட்டுத்தனமாக பொலிஸ் வாகனத்தை செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் பின் தொடரப்பட்டபோது, சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுந்தெருவில் நுழைந்தது. இதன் போது பல வாகனங்கள் நெடுஞ்சாலை 412 இன் கிழக்கே மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது எதிரே வந்த வாகனத்தில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் 60 மற்றும் 55 வயதான கணவன் மனைவியும், அவர்களின் பேரப்பிள்ளையும் அதில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் பொலிஸாரால் துரத்தப்பட்ட சந்தேகநபரும் எதிர்திசையில் வந்த வாகனத்தில் பயணித்து மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். எனினும் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பொது மக்களை பாதிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மதுபான கடையில் கொள்ளையிட முயன்ற சந்தேக நபரையோ பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். சந்தேக நபருக்கு எதிரான செயற்பாட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content