ஐரோப்பா

கிரீஸில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள் : அச்சத்தில் மக்கள்!

மத்திய கிரீஸில் உள்ள வோலோஸ் துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 100 டன்களுக்கும் அதிகமான செத்த மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

இறந்த நன்னீர் மீன்கள் ஏதென்ஸுக்கு வடக்கே 320 கிலோமீட்டர் (200 மைல்) தொலைவில் உள்ள விரிகுடாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோலோஸின் சேம்பர் ஆஃப் காமர்ஸின் கூற்றுப்படி, கடந்த மூன்று நாட்களில் ஏராளமான மீன்கள் கரையொதுங்கியுள்ளதாகவும், இதனால் மீன்பிடி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக மீன்கள் இவ்வாறு கரையொதுங்குவதால் இயற்கை அனர்த்தம் ஏதும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்