திறைசேரி செயலாளரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும்!
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்திற்கு பொருப்பேற்று திறைசேரி செயலாளரும், சம்பந்தப்பட்ட பொருள் அமைச்சரும் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற திலீத் ஜெயவீர மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், திறைசேரி நிதிகள் அடையாளம் தெரியாத தரப்பினருக்கு மாற்றப்பட்ட சமீபத்திய சம்பவத்திற்கு ஹேக்கர்களைக் காரணமாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நியாயமான விசாரணைகளுக்காக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி





