விளையாட்டு

போராடி இரண்டாவது போட்டியை வென்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் Craig Ervine அதிகபட்சமாக 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன 4 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Richard Ngarava அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content