தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து வீட்டில் இருந்து போன மகன் இதுவரை வீடு திரும்பவில்லை

பலாங்கொட சமனலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான ஒருவர் கடந்த 3ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து மகன் ஓடிவிட்டதாக காணாமல் போனவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
அப்படி வீட்டை விட்டு வெளியேறிய அவர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
இது தொடர்பில் அவரது நண்பர்கள் பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குழந்தை ஒன்றும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பலாங்கொடை சமனலவத்தை பிரதேசத்தில் காணாமல் போனதாகவும், அந்த குழந்தையை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)