இலங்கை

வேட்டையாட சென்ற இடத்தில் தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்!

தெதிகம ஜயலத் கந்த பிரதேசத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் சென்றுள்ள நிலையில் தந்தை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (28) வேட்டையாடச் சென்ற வேளையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகன் சுட்டதில் தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content