ஐரோப்பா

நெதர்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு: பரிதாபமாக உயிரிழந்த மூவர்

நெதர்லாந்து ரோட்டர்டாம் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று துறைமுக நகரத்தில் உள்ள வீட்டில் இரண்டு பேர் சுடப்பட்டனர். மூன்றாவது நபர் எராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சுடப்பட்டார்.

நகரின் இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலர் அதை நேரில் பார்த்துள்ளனர்.

சந்தேக நபர் இராணுவ உடை மற்றும் குண்டு துளைக்காத அங்கியை அணிந்திருந்த 32 வயதுடைய தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் என்றும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் 39 வயதுடைய பெண்ணை சுட்டுக் கொன்றார். அந்த பெண்ணின் 14 வயது மகளும் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேக நபர் பின்னர் எராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் வகுப்பறைக்குச் சென்றதாகக் கருதப்படுகிறது. அங்கு அவர் 46 வயதான விரிவுரையாளரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content