பிரதமர் லண்டனை சென்றடைந்தார்
இலங்கை பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயமாக லண்டனை சென்றடைந்துள்ளார்.
அவர் நேற்று பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் (Richard Wildash) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர்.
43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இதேவேளை கல்வி, அபிவிருத்திக் கற்கை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.





