ஆசியா

சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை!

சிங்கப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு தமது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 86 வயது நபருக்கு நேற்று 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Pak Kian Huat எனும் அந்த நபர் Lim Soi Moy எனும் 79 வயதுப் பெண்ணைப் பாரங்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

சம்பவம் HDB வீடொன்றில் நடந்தது. எந்தப் படுக்கையறையில் யார் உறங்குவது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலை வரை சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த Pak Kian Huat பின்னர் மரணம் விளைவித்ததாகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அவருக்குத் தண்டனை விதித்த நீதிபதி See Kee Oon மிகவும் கொடூரமான முறையில் பெண் தாக்கப்பட்டதைச் சுட்டினார்.

மரணம் விளைவித்த குற்றத்திற்குப் பிரம்படியுடன் கூடிய ஆயுள்தண்டனை அல்லது அபராதம், பிரம்படியுடன் கூடிய 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

50 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகளுக்குப் பிரம்படி கிடையாது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content