ஐரோப்பா

பொலிஸரிடமிருந்து தப்பியோடிய 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

La Courneuve நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

5 மணி அளவில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிப்பதையும், சிவப்பு சமிக்ஞையை மதிக்காமல் செல்வதையும் பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.எனினும் அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்ததால் காவல்துறையினர் இளைஞனை துரத்திச் சென்றனர்.

இந்நிலையில் Garges-lès-Gonesse வீதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்