ஆசியா

மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்த ஆஸ்கர் விருது பட நடிகர்… திரைத்துறையினர் அதிர்ச்சி!

தென்கொரிய நடிகர் லீ சன் கியூன், இன்று காலை தனது காருக்குள் இறந்த நிலையில் கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய நடிகர் லீ சன் கியூன் (48). இவர் கடந்த 2020ம் ஆண்டு பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படமான ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சியோலில் இன்று காலை லீ சன் கியூன், தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த சில மாதங்களாக சட்ட விரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக லீ சன் கியூன் அந்நாட்டு காவல் துறை விசாரணையை எதிர்கொண்டு வந்தார். காவல் துறை விசாரணையின்போது, ‘இரவு விடுதி ஒன்றில் தவறுதலாக போதைப் பொருளை உட்கொண்டதாக’ அவர் பதிலளித்திருந்தார்.

Lee Sun-kyun - StarsUnfolded

இந்நிலையில் இன்று காலை தனது காரில் லீ சன் கியூன் இறந்து கிடந்ததைக் கண்டு அவரது மனைவி யோன்ஹாப், பொலிஸாருக்குத் தகவல் அளித்தார். மேலும், லீ சன் கியூன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டு பிறந்த லீ சன் கியூன், ‘பாராசைட்’ படத்தில் பணக்கார தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். ‘ஹெல்ப்லெஸ்’, ‘ஆல் அபவுட் மை வைஃப்’ மற்றும் பல குறிப்பிடத்தக்க தென் கொரிய திரைப்படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

ஆப்பிள் டிவி பிளஸ்-ன் முதல் கொரிய தொடரான ‘டாக்டர் பிரைன்’ தொடரிலும் லீ சன் கியூன் நடித்துள்ளார். கடந்த 2021ல் வெளியான இந்த தொடர் 6 பாகங்களைக் கொண்ட அறிவியல் புனைகதை த்ரில்லராகும்.

லீ சன் கியூன் திடீர் மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content