இலங்கை

இலங்கை – தற்காலிகமாக கைவிடப்பட்ட கராப்பிட்டிய வைத்தியர்களின் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) வலியுறுத்தியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில், AMS தனது இரண்டு உறுப்பினர்களான டொக்டர் ஜயமினி ஹொரத்துகொட மற்றும் டொக்டர் ஹர்ஷனி தர்மவர்தன ஆகியோரின் கூற்றுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரியுள்ளது.

AMS, பணியிடத்தில் தவறான மொழி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதுடன், பாதுகாப்பான மற்றும் தொழில்முறை பணிச்சூழலை உறுதி செய்வதற்காக இந்த விஷயத்தை விரைவாகத் தீர்க்குமாறு சுகாதார அமைச்சகத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதேவேளை, குறித்த நிபுணருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில், திங்கட்கிழமை (04) வரை தமது பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக வைத்தியசாலையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்