7 ஆண்டுகள் கடந்தும் நீதி எங்கே? மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு காந்தி […]













