இலங்கை செய்தி

7 ஆண்டுகள் கடந்தும் நீதி எங்கே? மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி!

  • April 21, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு காந்தி […]

உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் வருவதில் இழுபறி!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் தூதுக்குழுவினர், இஸ்லாமாபாத்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான 2ஆம் சுற்று அமைதி பேச்சுக்காக ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது என தகவல் வெளியான நிலையிலேயே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்த முடியாது என்பதில் ஈரான் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, அமைதி பேச்சுக்காக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் செல்வார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடை பயணம்: தேரர்கள் இலங்கை வருகை!

  • April 21, 2026
  • 0 Comments

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக , அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதிக்கான நடைப்பயணத்தில் கலந்துகொண்டு, உலகம் முழுவதும் அன்பைப் பெற்ற ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் அவர்களுடன் வருகை தந்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்களை, புத்தசாசன, சமய மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுற்றுலாசென்ற அரசியல்வாதி துப்பாக்கியுடன் கைது!

  • April 21, 2026
  • 0 Comments

“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர,Premalal Jayasekara நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் அவிசாவளை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த தரப்பினருடன், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள யுரேனியத்தை மீட்பது கடினம்: ட்ரம்ப்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான பணியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் 125 போர் விமானங்கள் மூலம் ஈரானிய அணுசக்தி தளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், நிலத்தடியில் புதைந்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான மற்றும் நீண்ட காலப் பணியாக […]

செய்தி விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது Mumbai Indians

  • April 21, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது Mumbai Indians அணி. ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் நேற்று மோதின. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியை இன்று பார்வையிடுகிறது ஐரோப்பிய தூதுக்குழு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர். கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன. எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்!

  • April 21, 2026
  • 0 Comments

பங்களாதேஷ் Bangladesh மற்றும் நியூசிலாந்து New Zealand ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் ODI போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரரான நிக் கெல்லி 102 பந்துகளில், 83 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பல்மீது தாக்குதல்: சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வு!

  • April 21, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது. தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கும் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் […]

இந்தியா செய்தி

இந்தியா, தென்கொரியாவுக்கிடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • April 21, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மையுங் Lee Jae Myung அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். அவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய தென் கொரிய ஜனாதிபதி, பின்னர் குடியரசுத் தலைவர் […]

error: Content is protected !!