புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு என்பவற்றை முற்றாக நிராகரிக்கும் கையெழுத்துப் போரட்டம் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலையில் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வின்போதே கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதலில் கையொப்பம் இட்டனர். அதன்பின்னர் நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் கையெழுத்திட்டனர். […]













