அரசியல் இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: நீதியான விசாரணை தொடர்பில் சந்தேகம்!

  • February 11, 2026
  • 0 Comments

“குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam தெரிவித்தார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் […]

இந்தியா

கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்திய பிரதமர் இரங்கல்!

  • February 11, 2026
  • 0 Comments

கனடா பாடசாலைக்குள் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, […]

விளையாட்டு

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டம்: போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்!

  • February 11, 2026
  • 0 Comments

T 20 உலகக்கிண்ண தொடர்பில் இன்று நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் தென் ஆப்பிரிக்கா South Africa அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக Quinton de Kock 59 ஓட்டங்களையும், Ryan Rickelton 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். […]

இலங்கை செய்தி

கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!

  • February 11, 2026
  • 0 Comments

திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]

இலங்கை செய்தி

மாறியது வரலாறு: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார். முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார். அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். “ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

  • February 11, 2026
  • 0 Comments

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி Amarakeerthi Athukorala கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள். மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் European External Action Service , பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினர். பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தை […]

அரசியல் இலங்கை செய்தி

வலுவான எதிரணி மலரும்: ஐதேக நம்பிக்கை

  • February 11, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardena தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம். கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • February 11, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் நடத்தாது.” என அடித்துக் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குரிய வாக்குவங்கி மேலும் வீழ்ச்சியடையும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. தோல்வியென தெரிந்தும் அதனை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி முன்வராது என்றே தெரிகின்றது. தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. […]

error: Content is protected !!