எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தில் மாயமான நபர் 07 நாட்களின்பின் உயிருடன் மீட்பு!!
எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன 52 வயதான நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா ஒரு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தின் இறுதி தருணத்தில் மரண மண்டல பகுதியில் வைத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாக ஆக்ஸிஜன், உணவு, தண்ணீர் எதுவும் இன்றி உயிர் பிழைத்திருந்த அவர், ‘அடிவார முகாமுக்கு அருகில்’ கண்டுப்பிடிக்கப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




