ஜம்மு காஷ்மீரில் பெரும் சோகம் – 22 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகள் பேருந்தொன்று வீதியிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். இதன்போது 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ராம்நகரிலிருந்து உதம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, காலை சுமார் 10 மணியளவில், வளைவு ஒன்றில் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, மலையோரப் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, இராணுவம், பொலிஸ் மற்றும் […]




