இலங்கை செய்தி

சுரேஷ் சலே 3 நாட்கள் தடுப்பு காவலில்!

  • February 25, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (25) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே மேற்படி தகவல் வெளியிட்டப்பட்டது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெடவத்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்படி ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். […]

இலங்கை செய்தி

இலங்கை, ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் பாதிக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் […]

இந்தியா

“இஸ்ரேல் நாடாளுமன்றில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர்”

  • February 25, 2026
  • 0 Comments

இந்திய India  பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi இரு நாள் அரசமுறைப் பயணமாக இன்று (25) இஸ்ரேல் பயணமானார். இஸ்ரேல் Israel நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெருகின்றார். தனது இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பயணம் மேற்கொள்கின்றேன். சமீபத்திய […]

அரசியல் இலங்கை செய்தி

சமூக சக்தியென்பது வறுமை ஒழிப்பு ஆயுதம்: கிளிநொச்சியில் அமைச்சர் விளக்கம்!

  • February 25, 2026
  • 0 Comments

“சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (25.02.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு […]

இந்தியா

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

  • February 25, 2026
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுR. Nallakannu  காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்தியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே கைது: பொலிஸார் கூறுவது என்ன?

  • February 25, 2026
  • 0 Comments

விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் E.U. Woodler மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார். “ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் […]

இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டைக் கொலை: 2ஆவது துப்பாக்கிதாரி சிக்கியது எப்படி?

  • February 25, 2026
  • 0 Comments

அக்குரேகொட இரட்டைக் கொலை Akuregoda double murder சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார். அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரு துப்பாக்கிதாரிகளே சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பின்சென்றனர். இது தொடர்பான விசாரணை வேட்டையில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிதாரியொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தடுப்பு காவலில் […]

பொழுதுபோக்கு

மலை உச்சியில் நாளை இணையும் இரு இதயங்கள்!

  • February 25, 2026
  • 0 Comments

நடிகர் விஜய்தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா Rashmika ஆகிய ஜோடியின் காதல் திருமணம் நாளை நடைபெறுகின்றது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனராம். திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் இடம்பெறவுள்ளதாம். மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்ற இடமாகும். திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா, […]

இலங்கை செய்தி

விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath இரு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளை (26) ஜேர்மன் செல்கின்றார். ஜேர்மன், ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் பிரெமன் அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. இதன்போத வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு விழா […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

புலிகளுக்காக எனது ஆதரவு குரல் ஒலிக்கும: வைகோ சூளுரை!

  • February 25, 2026
  • 0 Comments

“நான்; எப்போதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன்.” இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ MDMK General Secretary Vaiko தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோவால் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு […]

error: Content is protected !!