இலங்கை செய்தி

T20 உலகக் கிண்ணம் – இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரும் இந்திய நிறுவனம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்திய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் செயற்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில், இலங்கை கிரிக்கெட் அணியின் அனுசரணையாளராக அமுல் நிறுவனம் செயல்பட்டது.

ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 2024 ஜூன் 3 ஆம் திககி தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டி நியூயார்க்கில்  இடம்பெறவுள்ளது.  உலகக் கோப்பை 2024 ஜூன் 01 முதல் 29 வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும்.

“அமுல் நிறுவனம், ஸ்ரீலங்கா கிரிக்கட் உடனான பங்காளித்துவமானது ஒரு சிறந்த நகர்வாகும்.

சர்வதேச விளையாட்டு வர்த்தக நாமத்துடன் இணைந்திருப்பது நிச்சயமாக சந்தை வளர்ச்சியைப் பெறுவதற்கும், சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் அதன் வர்த்தக முத்திரைத் தெரிவுநிலையை மேலும் அதிகரிப்பதற்கும் நிச்சயம் உதவும்” என கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content