எபோலா தொற்று சந்தேகம் : பிரேசிலில் இருவர் தனிமைப்படுத்தலில்!
எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிரேசிலில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரங்களைச் சேர்ந்த இருவர், தனிமைப்படுத்தல் செயல்முறையின் கீழ் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காய்ச்சல் உள்ளிட்ட லேசான அறிகுறிகளைக் காட்டியதைத் தொடர்ந்து, உகாண்டாவிலிருந்து வந்த பெல்ஜியம் மற்றும் காங்கோ நாட்டவர்களே மேற்படி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டுள்ளனர்.
அவர்கள் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனை முடிவுகள் அடுத்த வாரம் கிடைக்கும் என்று பிரேசில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





