இலங்கை

ஐரோப்பாவில் இருந்து இலங்கையில் சென்ற காதலர்களின் நிலை – காதலிக்காக உயிர்விட்ட காதலன்

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிமோதர பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற ஜெர்மன் நாட்டவர் மற்றும் அவரது காதலி நீரோடையில் சிக்கிய பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

ஜெர்மனியைச் சேர்ந்த  ஜோயல் பிரான்சிஸ் ரபேல் மற்றும் அவரது காதலி கடலுக்கு சென்ற நிலை காதலன் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த வாரம் இலங்கை சென்றடைவர்கள் என தெரியவந்துள்ளது.

மாலை 4:00 மணியளவில் தங்காலை, சீனிமோதர, புபுது மாவத்தையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளனர்.

உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் தாம் வந்தவுடன் காதலி கடலில் குளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். காதலின் கோரிக்கையை நிறைவேற்ற நினைத்த காதலன் விடுதியின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது காதலியுடன் அருகில் உள்ள கடலில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும், அந்த இடத்தில் இருந்த சிலர் இந்த வெளிநாட்டவர்களை மீட்டதாகவும், அவர்கள் 1990 அம்புலன்சில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது காதலன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜேர்மன் தூதரகத்தின் ஊடாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அனுமதியின் அடிப்படையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தங்காலை மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் சடலம் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content