இலங்கை

இலங்கையின் 2024 ஆம் ஆண்டும் கடினமாகத்தான் இருக்கும் : ரணில்!

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அறிவிக்கும் கூட்டம் நேற்று (14.11)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என்றும்,  அது படிப்படியாக மேம்படும் என்றும் கூறினார்.

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம். 2018 மொத்த உள்நாட்டு உற்பத்தி 94.5 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2022 மொத்த உள்நாட்டு உற்பத்தி 77 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 85 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவித்த அவர், நாம் இன்னும் 2018 இன் நிலையை எட்டவிலை எனத் தெரிவித்த அவர், அடுத்த ஆண்டும் அந்த நிலையை நாம் எட்டமாட்டோம் எனவும், 2025 இருந்து நாம் பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content