இலங்கை செய்தி

மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் – கணவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

மலேசியாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

உயிரிழந்த பெண் தொடர்பில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல் – கொபேகனே பகுதியைச் சேர்ந்த நிலாந்தி பண்டார என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நிலாந்தி தனது நண்பர் ஒருவர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி, குறித்த வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்படி வேறு இடத்தில் வேலை செய்வதாக கூறியிருந்தார்.

இத்தகைய பின்னணியில்தான் நிலாந்தியின் வீட்டினருக்கு அவரை பற்றிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

நிலாந்தி அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், நிலாந்தியின் கணவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content